spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்

-

- Advertisement -

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்

முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

murder

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (75).விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இவரது மருமகள் மருதாம்பாள் என்பவர் நிலத்தகராறு தொடர்பாக வம்பு செய்து மாணிக்கத்தை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணிக்கம் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.

we-r-hiring

இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாகியிருந்த மருதாம்பாளை தேடி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் மருதாம்பாள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மருதம்பாளை கைது செய்தனர். மருதம்மாளிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கைப்பற்றப்பட்டது. போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ