மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்தித்து பேட்சியளித்துள்ளாா்.
வெளியான +2 தேர்வு முடிவுகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, ”கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய ஆசிரியர்களின் கடின உழைப்பினால் தான் இந்த அளவிற்கு முடிவுகள் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியர் வளத்தை வைத்திருப்பதால் பள்ளிக்கல்வித்துறையில் பெருமைப்படுகிறோம்.

அரசின் சிறப்பு திட்டங்கள் மாணவரிடம் சென்று சேர்ந்ததால் தான் மாணவர்கள் இலக்கு வைத்து படிக்கின்றனர். நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களால், வெறும் 12ம் வகுப்பு விடக்கூடாது என்று நன்றாக படிக்கின்றனர். அதன் விளைவாகவே இந்த தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாக பார்க்க முடிகிறது.
கடந்த முறை வெறும் 35 விமானவர்கள் தான் தமிழில் 100/100 மதிப்பெண் எடுத்தனர். இந்தாண்டு 135 ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த முறை மொத்தமாக 10, 12ம் வகுப்பு சேர்த்து தமிழில் 43 மாணவர்கள் தான் 100/100 சதவீதம் மதிப்பெண் எடுத்தனர். இன்னும் 98 எத்தனை பேர், 99 எத்தனை பேர் என்பது கணக்கிடப்பட்டால் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.”