12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 88 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனா். கடந்த ஆண்டை விட 1 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 5387 பேர் தேர்வு எழுதியதில் 4747 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 1 விழுக்காடு அதிகரித்து 88.12 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண் மாணவர்கள் 83 சதவீதம் பேரும், பெண் மாணவிகள் 91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நுங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 54 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக பட்சமாக கணினி அறிவியலில் 26 மாணவர்கள் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 551 – 600 மதிப்பெண்களை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். 501-550 மதிப்பெண்களை 247 பேரும் 451 – 500 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!
