spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!

-

- Advertisement -

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தால், நேட்டோ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரில் இறங்கும் அபாயம் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதன் பின்னணி மற்றும் போர் நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி தனது யூடியூப் சேனலில் அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டு விட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவிடுகிறார். இது எதிர்பாராத ஒரு அறிவிப்பு ஆகும். யாருமே எதிர்பார்க்கவில்லை இந்த போரை நிறுத்துவார்கள் என்று. கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி விவாதங்களில் நம் நாடு வெற்றி பெற வேண்டும் என்கிற தேசப்பற்று காரணமாக பேசினார்கள். அப்படி இருந்தாலும் நாட்டை நாசம் செய்வதற்காக ஒரு கும்பல் இறங்கி வேலைபார்த்தனர்.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக முன்பே தகவல்கள் வந்தன. ஐ.நா. தொடர்புடைய நண்பர்கள் இந்த விவகாரத்தில் நேட்டோ உள்ளே வருவதாக சொன்னார். நேட்டோ எப்படி வரும் என்கிறபோது, துருக்கியின் டிரோன்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் கராச்சி துறைமுகத்திற்கு துருக்கியில் இருந்து போர்க்கப்பல் வந்தது என்றும் தகவல் வெளியானது. கராச்சி விமான நிலையத்திற்கு, ராணுவ தளவாடங்கள் மற்றும் டிரோன்கள் வந்து இறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தது. எனினும் இந்தியா தாக்கி அழித்த ட்ரோன்களில் ஒன்று துருக்கியில் இருந்து வந்ததாகும்.

துருக்கியின் டிரோனையோ, அல்லது பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக வந்துள்ள துருக்கியின் படையினர் மீதோ தாக்குதல் நடந்தால், நேட்டோ நாடுகள் அனைத்தும் போரில் இறங்கும் என்பதுதான் சட்ட விதிகளில் உள்ளது என்று ஐ.நா.வை சேர்ந்த நண்பர் சொன்னார். துருக்கி, நேட்டோ அமைப்பின் உருப்பு நாடாகும். துருக்கி  கைவைத்தால் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நேட்டோ நாடுகளும் களமிறங்க வேண்டும் என்பது சட்ட விதியாகும். காலங்காலமாக உறுப்புநாடுகள் தங்களுடைய வருமானத்தில் 2.5 சதவீத நிதியை நேட்டோவுக்கு ஒதுக்குகின்றன. அதன் உறுப்பு நாடுகள் மீது தூசி துரும்பு பட்டாலும், அது எந்த நாடாக இருந்தாலும் அதற்கு எதிராக அனைத்து நாடுகளும் களமிறங்க வேண்டும் என்பது விதியாகும். இந்தியாவுக்கு நேட்டோ அமைப்பின் மூலம் நெருக்கடி கொடுக்கிற வேலையை செய்தார்கள். பிரதமர் மோடி நெருக்கமுடன் இருந்த அரபு நாடுகளின் தலைவர்கள் யாரும், இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு தான் ஆதரவு அளித்தார்கள். நேட்டோ படைகளை விவரமாக துருக்கி, இந்தியாவுக்கு எதிராக திருப்புகிற வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வலியுறுத்தல்!

இந்தியா மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் யார் என்று சர்வதேச நாடுகளுக்கு இந்தியா தெளிவாக விளக்கவில்லை. அதற்கான ஆதாரங்களை கொடுக்கவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரூபியோ சொல்லிக்கொண்டே இருந்தார். அதேநேரத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தாங்கள் எப்படி தலையிட முடியும் என்று சொன்னார். ஆனால் அதிபர் டிரம்ப் என்ன சொல்கிறார் என்றால் நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதற்கு ஒப்புக் கொண்டார்கள் என்று டிரம்ப் ட்விட் செய்துள்ளார். அதன் பிறகு நமது வெளியுறவுத் துறை செய்தியாளர் சந்திப்பை நடத்தி போர் நிறுத்தம் வந்து விட்டதாக அறிவித்தார்கள். மேலும் பாகிஸ்தான் – இந்தியா தரப்பில் பிற்பகல் 3.30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் தான் அழைப்பு விடுத்ததாகவும், அதன் பிறகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல – செல்வப்பெருந்தகை தாக்கு

பெரிய நிம்மதி என்னவென்றால் பஹல்காமில் 6 பேர் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் யார் என்றே தெரியவில்லை. அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மசூர் அசாத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதை வரவேற்க தக்க செயலாகும். அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் நம் தாக்குதல் நடத்தியதும், அதை தடுத்ததும் பெரிய விஷயம்தான். ஆனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நம்முடைய 5 ரபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் சொல்லியது. சர்வதேச ஊடகங்கள் 3 என்று தெரிவித்தன. அதை இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. பஞ்சாப் மக்கள் நிம்மதியை இழந்துவிட்டனர். குஜராத், ராஜஸ்தானில் மின்சாரம் துண்டிப்பு. காஷ்மீரில்  பழையபடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் மீது சிறிய ரக ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் ஏவி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் நன்மை என்ன என்றால் இன்னும் சில நாட்களுக்கு போர் தொடர்ந்து இருந்தால் அத்தியாசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கும். பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி இருப்பார்கள். இது நாடு முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். நல்வாய்ப்பாக இந்த போர் நின்றுவிட்டதாக டிரம்ப் சொல்லிவிட்டார். என்னதான் வெளியுறவுத்துறை அதை ஒப்புக்கொள்ளா விட்டாலும் நாங்கள் தான் பேசி முடித்து விட்டோம் என்று டிரம்ப் சொல்லிவிட்டார். அப்போது அவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ சண்டை நின்றுவிட்டதால் மக்களுக்கு நல்லது.  ஏனென்றால் சண்டை தொடர்ந்து இருந்தால், அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். அதனால் போர் நிறுத்தம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ