spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!

டிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!

-

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி 3-வது நாட்டை தலையிட பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் ஹசீப் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அவதூறுகள் குறித்தும் ஊடகவியலாளர் ஹசீப் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையை ஒட்டி இந்த எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் ஏற்பட்டுள்ளது. இது 76 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆனால் டொனால்டு ட்ரம்பை பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கிறது. பாகிஸ்தான் என்கிற நாடு உருவாகியே 76 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை ஆயிரம் ஆண்டுகளாக நீடிப்பதாக புரிதல் இருக்கக்கூடிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்து மத்தியஸ்தம் செய்து, இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது என்று சொல்லப் படுகிறது. இதை எப்படி புரிந்துகொள்வது என்று புரியவில்லை. மத்திய பாஜக அரசு பிரதமர் மோடி ஒரு விஸ்வ குரு, அவர்தான் உலகத்தில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கக் கூடிய ஆற்றல் படைத்த நபர். அவரிடம் கேட்டுத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் போன்றவர்கள் செயல்படுகிறார்கள் என்று அவரை முன்னிலைப்படுத்தினார்கள். அப்படிபட்ட ஒரு நாட்டினுடைய பிரதமர் ஒப்புதல் இல்லாமல், அல்லது அவர் அறிவிக்காமல் அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்

இந்தியாவுக்குள் புகுந்து 26 பேரை படுகொலை செய்த தீவிரவாதிகளை, நீங்கள் அழித்தீர்கள். எல்லைத்தாண்டி சென்று 9 பயங்கரவாத இலக்குகள் தாக்கப்பட்டது. 100 பேர் வரை கொல்லப்பட்டார்கள். அதற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலை இந்திய ராணுவம் எதிர்கொண்டு, வீரம் செறிந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு பாகிஸ்தானை அடிபணிய வைப்பதற்கு தாக்குதல் யுக்திகள் வகுக்கப்பட்டு வந்தது. திடீரென அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தார். அமெரிக்க அதிபர் பேசுகிறார் என்றால், அவர் பிரதமர் மோடியிடமும், ஷபாஸ் ஷெரீபிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தை ஒரு இரவு முழுவதும் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் இரு நாடுகளும் பொது அறிவை பயன்படுத்தி போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்கிறது என்றால், இரு நாடுகளின் ஒப்புதல் வேண்டும்.  நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருப்பவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். அதற்காக தான் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

டொனால்டு ட்ரம்ப் இரு நாடுகளும் தங்களை அணுகியதால் தான் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறது. அப்படி என்றால் அது இந்தியாவின் கொள்கையில் இருந்து மாறுபடுவதாகும். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு ஆகும். இது இந்தியா – பாகிஸ்தான் இடையே பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயமாகும். அப்போது மத்தியஸ்தம் செய்ய 3வது நாட்டை அழைத்தது என்பது கொள்கையில் மேற்கொண்டுள்ள மாற்றமாகும். ட்ரம்ப் சொல்வது உண்மை என்றால், இந்த கொள்ளை மாற்றத்தை மேற்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த ஒப்புதலை வாங்கினீர்களா? அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தை கூட்டி, பிரதமர் மோடி பேச வேண்டும். ஒரு பெரிய பிரச்சினையே நடந்து முடிந்துவிட்டது. ஆனால் என்ன நடந்தது என்று வாய் திறக்கவில்லை.

1971-ல் வங்கதேச போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் கடற்படைக்கு சொந்தமான செவன் ஃப்ளீட் என்கிற விமானந்தாங்கி போர்க்கப்பலை இந்தியாவுக்கு எதிராக நகர்த்தியது. அப்போது இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை, இதில் மூன்றாவது நாட்டை தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக நின்று பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசம் என்கிற நாட்டை உருவாக்கி கொடுத்தார். அதை இன்றைக்கு காங்கிரஸ் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் போர்க்கப்பலை இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா போர்க்கப்பலை நகர்த்திய போதும் இந்திரா காந்தி தான் எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்தார். அப்படியாக இன்றைக்கு பிரதமர் நரேந்திர மோடி இருந்தாரா? என்பதுதான் கேள்வி. இந்த கேள்வியை காங்கிரஸ் கட்சி சரியாக எழுப்புகிறது.

ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் ஏழைமக்களிடம் திருடுவதாக - ராகுல் காந்தி விமர்சனம்

எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய கேள்வி என்பது போர் நிறுத்த அறிவிப்பு விவகாரத்தில் என்ன நடைபெற்றது. அதை சொல்வதற்கு பதிலாக இதை எப்படி திசை திருப்புகிறார்கள் என்றால் இதை அறிவிப்பாக வெளியிட்ட  வெளியுறவுத்துறை செயலாளரை டார்கெட் செய்கிறார்கள். விக்ரம் மிஸ்ரி, அரசு எடுத்த முடிவை தெரிவிக்கக் கூடிய ஒரு மெசஞ்சர்தான். அவருக்கு எதிராக வலதுசாரிகள் எந்த அளவுக்கு இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்? அவருடைய குடும்பத்தினர் குறித்து அவதுறு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். இதனால் அவர் தன்னுடைய டிவிட்டர் வலைதள பக்கத்தை லாக் செய்யும் அளவுக்கு போயுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர், புரிதல் அடிப்படையில் நிறுத்தத்திற்கு வந்துள்ளது என்பது தான் மிஸ்ரியின் கருத்து ஆகும். அப்படியான தகவலை தெரிவித்த விக்ரம் மிஸ்ரியை, போரையே அவர்தான் நிறுத்தினார் என்பது போன்று விமர்சித்து வருகிறார்கள். இதற்கு எதிராக பாஜகவினர் ஒருவர் கூட வாய் திறக்க வில்லை.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் பிரான்சிடம் வாங்கிய ரபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் மேலும் ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இந்தியா இறையாண்மை உள்ள நாடு ஆகும். தனக்கான பாதுகாப்பை உறுதி செய்வது என்பது, தன் நாட்டிற்குள் மக்களை கலந்தாலோசித்து, அதிகாரிகளை கலந்தாலோசித்து, பலம் – பலவீனம் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். இந்த அடிப்படைகள் எல்லாம் மீறப்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி.

நாம் என்ன உபகரணங்கள் வாங்க வேண்டும் என்று வெளியில் இருந்து நம் மீது திணித்துள்ளனரா? ரஷ்யாவின் எஸ்.400 தாக்குதலில் இருந்து பாதுகாத்துள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கக்கூடிய ஆயுதங்கள் குறைந்துள்ளது. பிரான்ஸ் விமானம் வீழ்த்தப்பட்டிருக்கிற போதும் அவர்களிடம் இருந்து கூடுதல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளோம். காஷ்மிர் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீடு மீறப்பட்டிருக்கிறதா? என்று தொடர்ச்சியான கேள்விகள் உள்ளன. இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியவர் அமைதியாக உள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ