Homeசெய்திகள்சினிமா'சேரன்'கிட்ட பண உதவி கேட்டேன்.... என்னை அவர்கிட்ட போக சொன்னாரு.... கதறி அழுத பிரபல பெண் பேச்சாளர்!

‘சேரன்’கிட்ட பண உதவி கேட்டேன்…. என்னை அவர்கிட்ட போக சொன்னாரு…. கதறி அழுத பிரபல பெண் பேச்சாளர்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். இவர் வித்தியாசமான, உணர்வுபூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். 'சேரன்'கிட்ட பண உதவி கேட்டேன்.... என்னை அவர்கிட்ட போக சொன்னாரு.... கதறி அழுத பிரபல பெண் பேச்சாளர்!இது தவிர இவர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளையும் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் போன்ற படங்களை இன்று வரையிலும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த படம் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் வெளியான சமயத்தில் இப்படம் தொடர்பான கருத்துக்களை தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பிரபல பேச்சாளர்களில் ஒருவரான சுமதிஸ்ரீ இயக்குனரும், நடிகருமான சேரனிடம் உதவி கேட்டுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய சுமதி ஸ்ரீ, ” பெற்றோர்கள் ஆதரவில்லாமல் வளர்ந்து படித்தவர்களில் நானும் ஒருவர். அப்போது எனக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். 'சேரன்'கிட்ட பண உதவி கேட்டேன்.... என்னை அவர்கிட்ட போக சொன்னாரு.... கதறி அழுத பிரபல பெண் பேச்சாளர்!அவர்களையெல்லாம் தேடி சந்தித்து நன்றி சொல்லி வருகிறேன். ஒரு தடவை மூன்று மாதமாக நான் ஹாஸ்டலில் பணம் கட்டவில்லை என்று என்னுடைய ஹாஸ்டல் வார்டன் என்னை வெளியே போக சொல்லிவிட்டார். எங்கு போவது என்று தெரியவில்லை. அந்த சமயத்தில் தான் ஆட்டோகிராப் படம் குறித்த கருத்துக்களை இந்த தொலைபேசியில் அழைக்க வேண்டும் என விளம்பரம் வெளியாகி இருந்தது. அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது சேரன் தான் எடுத்தார். என் நிலைமையை சொல்லி கதறினேன். அந்த நேரத்தில் ஜிபே போன்ற வசதிகள் எதுவும் இல்லை. சிறிது நேரம் அவகாசம் தரும்படி கேட்டார். அதன் பின்னர் ஆட்டோகிராப் படம் ஓடுகின்ற சோனா மீனா தியேட்டருக்கு போகச்சொன்னார். ஆட்டோவில் போகும்படி வலியுறுத்தினார். நான் போவதற்குள் தியேட்டர் மேனேஜரிடம் எனக்கு பணம் கொடுக்க சொல்லி சொல்லி இருந்தார் சேரன். 'சேரன்'கிட்ட பண உதவி கேட்டேன்.... என்னை அவர்கிட்ட போக சொன்னாரு.... கதறி அழுத பிரபல பெண் பேச்சாளர்!நான் போன பின்னர் மேனேஜர் என்னிடம் பணத்தை தந்துவிட்டு உங்களை சேரன் சார் சாப்பிட வைத்து அனுப்ப சொன்னார் என்று கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. பணம் தருவதை தாண்டி சாப்பிட வைத்து அனுப்ப வேண்டும் என்ற நல்ல மனசு அவருக்கு இருந்தது. முகம் தெரியாத ஒரு பெண்ணின் அழுகையை புறக்கணிக்காமல் உதவி செய்த சேரன் சாரை நான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சந்தித்து நன்றி சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ