Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை -  கஜேந்திர சிங் ஷெகாவத்

தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை –  கஜேந்திர சிங் ஷெகாவத்

-

- Advertisement -

தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும், அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான இன்னும் அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவை என்றும், அப்படிப்பட்ட முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில், உரிய அங்கீகாரத்தை கண்டிப்பாக வழங்குவோம் என்றும் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை -  கஜேந்திர சிங் ஷெகாவத்மோடி அரசின் 11 ஆண்டுகால சாதனைகள் குறித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று, மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிர்வாகத்தை மோடி வழங்கி வருகிறார். கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான அரசை மோடி வழங்கி வருகிறார். மோடி அரசில், 30 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

அனைத்து துறைகளிலும் சுயசார்பு திறன் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றார். ஊழல் குறித்தும், சிஏஜி அறிக்கை குறித்தும் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி குறித்து கேட்டபோது, சிஏஜி அறிக்கை,  அனுமானத்தின் அடிப்படையிலானது  என்றும், அது இறுதியான முடிவுகள் அல்ல என்றும், திட்டம் அறிவிக்கும் போது கூறிய மதிப்பீடும், செயல்படுத்தும் போது மாறுபடக்கூடிய மதிப்பீடுகள் காரணமாகவும் இது போன்ற வேறுபாடுகள் வந்திருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததை போன்று எந்த ஊழல்களும் இந்த ஆட்சியில் கிடையாது என்று தெரிவித்தார்.

கீழடி குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர், தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் குறித்து பல வகையான ஆய்வுகள் கீழடியில் நடந்த போதும் கூட, இன்னும் அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவைப்படுகின்றன என்றும், அப்படி அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான மேலும் ஆய்வுகளும், முடிவுகளும் கிடைக்கும்போது, தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

MUST READ