Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்…

இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்…

-

- Advertisement -

திரைத்துறை சாதனைக்காக கெளரவ டாக்டர் பட்டம் இயக்குனர் அட்லீக்கு அவர் படித்த சந்தியாபாமா பல்கலைக்கழகம்  வழங்கி கெளரவிப்பு செய்தது. அடுத்த படம் அல்லு அர்ஜின் நடிக்கும் சன்பிக்சர் தயாரிக்கும் படம் மிக பிரமாண்ட மற்றும் தொழில்நுட்பத்தில் வெளியாகி தெரிக்க விடும் அட்லீ பேட்டியளித்துள்ளாா்.இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்… சத்தியபாமா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் 34-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா வேந்தர் மரியஜினா தலைமையில் நடைபெற்றது. இந்த  பட்டமளிப்பு விழாவில் திரைப்பட முன்னணி  இயக்குனர்  அட்லீ குமார்க்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பட்டமளிப்பு போது 4,221 இளங்கலை, 810 முதுகலை உள்ளிட்ட 5,031 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்படுகிறது. இவர்களில் 54 பேர் தங்கப்பதக்கமும், 79 பேர் முனைவர் பட்டம் பெற்றார்கள். அப்போது திரைப்பட்ட முன்னணி இயக்குனர் அட்லீ குமார்க்கு திரைப்பட துறையில் சாதனை புரிந்து வருவதால்  கெளர டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மனைவி பிரியா, தாய், தந்தை மற்றும் அவர் படித்த கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் திரைத்துறையினர் முன்னர் டாக்டர் பட்டத்தை பெற்றார்.இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்… பின்னர் மேடையில் பேசும்போது, நான் எடுத்த படங்கள் என் வாழ்க்கையில் நான் பார்த்த காட்சிகளை வைத்து உருவாக்கியது தான் கல்லூரியின் நிறுவனர் ஜே பி ஆர்  பார்த்து தான் பிகில்  படத்தில் ராயப்பன் கேரக்டராக வைத்துள்ளேன். சிங்கத்தை எப்படி நேரில் பார்ப்பது போல் அவர் இருப்பார் படிப்பு தாண்டி விளையாட்டு திறமையை  ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் என்று குறிப்பிட்டாா். இந்தக் கல்லூரியில் பி.எஸ்.சி விஸ்காம் மாணவராக சேர்ந்தவுடன் ஐந்தே நாட்களில் குறும்படம் எடுக்க விருப்பப்பட்டேன் அதற்கான அனுமதி கிடைத்தது.

அதுபோல் எல்லா மாணவர்களும் முன்னேற்றத்திற்கு  கல்லூரி காலத்தை  இழக்கக்கூடாது அங்கு நமக்காக ஒரு நண்பன் இருப்பான் அவன் தான் நம் முன்னேற்றத்திற்கும் சேர்ந்தே உழைப்பான் எப்பவும் அவனை நினைவில் கொள்ள வேண்டும் எனக்கும் அப்படி ஒருத்தனை இருந்தால் அவன் என்னை விட கம்மியாக தூங்கி உழைத்தவன் நான் இன்றளவும் மறக்கவில்லை அவன் தான் என் மனசாட்சி படிப்பு வேலை நல்ல மனிதர் எனப் பெயர் எடுத்தாலே மரியாதை தேடி வரும் எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. அம்மா, அப்பா, மனைவி, மகன்,  அண்ணன் தளபதி “விஜய்” கல்லூரி ஆசிரியர்கள் என எனக்கு பெரிய குடும்பம் உள்ளது.இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்… மெர்சல் படம் முதல் முறை இசையமைக்கும் போது ஏற்பட்ட உணர்வு எனக்கு இன்றளவும் உள்ளது. இந்த கல்லூரியில் படித்த எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது எனக்கு மிகப் பெருமையாக உள்ளது நாட்டுக்காகவும் உண்மையாகவும் நான் இருப்பேன் என்னுடைய தயாரிப்பாளர் இங்கு உள்ளார் அடுத்த படத்தையும் தெறிக்கவிடுவோம் சார் என்றார். என்னோட அம்மா அப்பாவை வெளி உலகுக்கு நான் காட்டவில்லை. ஆனால் இன்று முக்கிய நிகழ்வை காண வேண்டும் என்று அவர்களை அழைத்தேன். அவர்கள் முன்னிலையில் பட்டம் பெற்றேன். ஒரு குட்டி கதையுடன் சொல்கிறேன்.இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்… என் அண்ணன் விஜய் சொல்வது போல ஒரு கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலில் உள்ள படிக்கல்லை  தாண்டி மக்கள் சென்று  சாமியை கும்பிட்டுச் செல்பவர்கள் உண்டு. கோவில் நடைசாத்திய பின் அந்த படிக்கல் அந்த சாமி சிலை உடன் பேச துவங்கியது என்னப்பா என்ன மட்டும் தாண்டி போறாங்க ஆனா உன்ன மட்டும் இவ்வளவு பேர் வணங்கிட்டு போறாங்க என்ன கேட்டது அதற்கு அந்த சாமி சிலைகள் உன்ன கொண்டு வந்து ரெண்டு துண்டாக்கி நீல்சதுரமாக   பயன்படுத்திருக்காங்க ஆனால் என்ன ஆயிரம் பேர் வச்சு செய் செய்னு செய்ததால் இந்த மரியாதை வந்தது. அதனால் நம்மல என்ன  வச்சு செய்தாலும்  நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு  என்பதை நல்லா தெரிந்து கொண்டு நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் நன்றி வணக்கம் என்றார்.இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்… பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குனர் அட்லி,  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் படித்த கல்லூரியில் திரைப்படத்துறைகளுக்கான டாக்டர் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி என்றார். அப்போது அடுத்த படம் குறித்து நிருபர் கேள்விக்கு ஏற்கெனவே அறிவித்துவிட்டேன் அல்லு அர்ஜின் சார் நடிக்கும் படத்தை சன் டிவி நிறுவனம் திரு.கலாநிதி மாறன் எடுக்கும் படம் இந்தியாவில் மிகப்பெரிய யாரும் எடுக்காதவாறு  பிரம்மாண்டமான தொழில் புதிய தொழில் நுட்பங்களுடன்  படம் இருக்கும். அதன் படத்தின் வெளியாகும் செய்தி குறித்து தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்றார்.

மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் நல்ல ஆசிரியரிடம் படித்து முடித்து வந்தால் நல்ல மரியாதை கிடைக்கும். படிக்கும்போது இந்தத் துறையில் நான் வந்து கவனம்  செலுத்தினேன்.  அப்போது ஜேபிஆர் சார் 15,000 கொடுத்து குறும்படம் எடுக்க என்னை ஊக்குவித்தார் .அதுவே நான் டைரக்டர் ஆவதற்கு அடித்தளமாக அமைந்தது என்றார். வாழ்க்கைக்கு மிக முக்கியம் படிப்பு தான் எல்லா விதத்திலும் நம்மள அடிப்பாங்க ஆனா நம்ம படிப்பு தான் நம்மள காப்பாற்றும். அதுபோல் உணவும்  குடிநீரும் மிக அவசியம் என கூறிச் சென்றார்.

ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…

MUST READ