அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணா விமர்சன வீடியோ குறித்த கேள்விக்கு, அதிமுக இயக்கம் தன்னை எப்படி எல்லாம் அடிமைப்படுத்திக் கொள்ளுகிறது என்பதற்கு இது உதாரணம். அண்ணாமலை எம்ஜிஆர் ஜெயலலிதாவை ஆகியோரை வசைப்படாதது கிடையாது. அவர் அழைக்கும் மேடையில் இவர்கள் அமர்கிறார்கள் என்றால் அவர்கள் இயக்கத்தை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம். திராவிட இயக்கங்களை அழிப்போம் என்று சொன்ன எச். ராஜா அதில் தான் உள்ளார். நேற்று நடந்தது அரசியல் மாநாடு தான் இந்து சமய அறநிலைத்துறை அகற்றப்பட வேண்டும் என முருகன் மாநாடு தீர்மானம் குறித்த கேள்விக்கு, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்கட்டும். இந்து சமய அறநிலையத்துறை எப்படி உருவானது என்பது குறித்து ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறோம்.
கோவிலில் வந்த வருமானத்தை கொள்ளையடித்த கூட்டம் இருந்த காரணத்தால் தான் அறநிலையத்துறை தொடங்கப்பட்டது. பவன் கல்யாணக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் முன்னாள் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர். நேற்று நடந்த மாநாடு கலைந்து சென்ற மாநாடு, அது ஒரு நாள் கூத்து, என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளா்ா..

இதுவரை 117 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. 126 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள் பாஜகவினர். பாஜக சங்கிகள் கூட்டம் வேண்டுமா என்று தமிழக மக்கள் முடிவெடுப்பார்கள். சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று காட்டட்டும். அண்ணாமலைக்கு செல்வாக்கா நயனார் நாகேந்திரனுக்கு செல்வாக்கா என்று பாஜகவில் போட்டி நடந்து கொண்டுள்ளது. இந்த போட்டிக்காக நடந்த மாநாடு தான் மதுரை முருகன் மாநாடு, என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளாா்.