spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை

பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி- செல்வப்பெருந்தகை

மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவத, “பொதுமக்கள் தினமும் கடக்கும் ரயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. மக்கள் எங்கு அதிகம் செல்கிறார்களோ அந்த இடங்களில் பாதுகாப்பும், எச்சரிக்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய துயரங்களுக்கு ரயில்வே துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

we-r-hiring

ஒன்றிய ரயில்வே அமைச்சர் நேரடியாக இச்சம்பவத்தைக் கவனித்து, பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பது தான் ஒர் அரசின் முதல் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையும் பெற ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பு முறைகளை உறுதி செய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினாா்.

காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமோ…

MUST READ