spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்?

பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்?

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்?

தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடைசியாக ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாகி அதிக அளவில் வசூலை வாரிக் குவித்தது. இதை தொடர்ந்து அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டது.
பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்? அதே சமயம் அல்லு அர்ஜுன், பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அல்லு அர்ஜுன், அட்லீ படத்தை முடித்துவிட்டு திரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பாரா? அல்லது ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என்பது போன்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

we-r-hiring

இயக்குனர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு இயக்கத்தில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ