22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய விவகாரம், மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், தமிழக உணவு மற்றும் மருந்து தரகட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபா, இணை இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட “கோல்ட் ரிப்” என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.
இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கடந்த வாரம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.
அதே போல், 22 குழந்தைகளை பலி வாங்கிய மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கிய விவகாரம் தொடர்பாக, தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் தீபா ஜோசஃபின் திருவான்மியூர் வீட்டில் மற்றும் இணை இயக்குநர் கார்த்திகேயனின் அண்ணா நகர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் (Enforcement Directorate – ED) சோதனை நடத்தி வருகின்றனர்.
22 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான மருந்து நிறுவனத்தைக் கண்காணிக்கத் தவறியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிர்வாக இயக்குநர் தீபா, இணை இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை தற்போது சோதனை நடத்துகிறது. ஸ்ரீ சன் பார்மாவுடன் பணப் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் புதிய அப்டேட்!