கருப்பு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் ‘கருப்பு’. இந்த படத்தை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கங்குவா’ திரைப்படமும், இந்த ஆண்டு வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படமும் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில், அடுத்ததாக ‘கருப்பு’ திரைப்படத்தை எதிர்நோக்கி பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தில் சூர்யா, வக்கீலாக நடிக்க இவருடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதே சமயம் படத்திலிருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இருப்பினும் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இதன் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. அதன்படி இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


