Homeசெய்திகள்சினிமா6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு... கடைசியில் எஸ்கேப் ஆன லிங்குசாமி!

6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு… கடைசியில் எஸ்கேப் ஆன லிங்குசாமி!

-

- Advertisement -

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை இயக்க இருந்தார் லிங்குசாமி. அதற்காக தங்கள் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிவிபி கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார் லிங்குசாமி.

பின்னர் அந்தக் கடனுக்கான வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்துள்ளார் லிங்குசாமி. ஆனால் வங்கியில் பணமில்லாமல் அந்த காசோலை திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லிங்குசாமி தரப்பில், “காசோலை தொகையில் 20 சதவீதம் ஏற்கெனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளனர்.

20 % தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ