spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

-

- Advertisement -

சென்னை கேகே நகரில் ரவுடி வெட்டிக்கொலை, காரில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல் – போலீசார் விசாரணை

சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

we-r-hiring

இவர் இன்று காலை வீட்டின் அருகே உள்ள பாரதிதாசன் காலனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் ரமேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். தாலுகா மற்றும் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் கே.கே நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

MUST READ