‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகா்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன், ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்தது. திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக கடந்த டிசம்பா் 18ம் தேதி தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், கடைசி நேரத்தில் சில காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கேட்டது. குறிப்பாக படத்தில் மத உணர்வுகள் மற்றும் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும், எனவே படத்தை 9 பேர் கொண்ட மறு ஆய்வுக் குழுவுக்கு, தணிக்கை வாரியத்தின் தலைவர் அனுப்பி வைத்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுக்க.. படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கி, படத்தை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவும் கொடுத்தது. ஆனால், தணிக்கை வாரியம், உடனடியாக மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சென்சாா் போா்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தயாாிப்பு நிறுவனம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. மறு ஆய்வுக் குழுவுக்கு விண்ணப்பித்து 20 நாள்களில் சென்சாா் சான்றிதழ் பெற ஏற்பாடு நடைப்பெற்று வருகிறது. இதனால் பிப்ரவரி இறுதியில் ஜனநாயகன் ரிலீசாகும் எனவும், திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழை வழங்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தகவல்கள் எதுவும் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு ஏன்? – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்



