spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலய்யா பாத்தாலே எல்லாம் பறக்கும்... அரங்கத்தை சிரிக்க வைத்த ரஜினி!

பாலய்யா பாத்தாலே எல்லாம் பறக்கும்… அரங்கத்தை சிரிக்க வைத்த ரஜினி!

-

- Advertisement -

தெலுங்கில் பழம்பெரும் நடிகரான என்டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ரஜினி விஜயவாடா சென்றார். அங்கே விமான நிலையத்தில் என்டிஆரின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

we-r-hiring

பின்னர் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பெற்றுக்கொண்டார். அதையடுத்து என்டிஆர் சிலை திறப்பில் பங்கேற்றார். பின்னர் பேசிய ரஜினி “என் நண்பர் (பாலய்யா) அவருடைய ஒற்றைப் பார்வையாலே மிரட்டிவிடுவார். கண் சிமிட்டினால், ஒரு வாகனம் வெடித்து 30 அடி உயரம் வரை பறக்கும். அதை ரஜினிகாந்த், அமிதாப், ஷாருக்கானோ, சல்மான் கானோ செய்ய முடியாது.’ இதுபோன்ற செயல்களைச் செய்தால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

என்று சூப்பர் ஸ்டார் பாலையாவை புகழ்ந்து பேசியபோது ரசிகர்கள் அனைவரும்  சிரித்தனர்.

மேலும் “பாலையா அப்படி செய்தால் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தெலுங்கு பார்வையாளர்கள் அவரை பாலய்யாவாக பார்க்கவில்லை, மறைந்த என்டிஆரை பாலையா ரூபத்தில் பார்க்கிறார்கள். அவர் அன்பான உள்ளம் கொண்டவர். அவர் திரையுலகிலும், அரசியலிலும் மென்மேலும் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றும் கூறி முடித்தார் ரஜினிகாந்த்.

MUST READ