Homeசெய்திகள்தமிழ்நாடுகொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

-

- Advertisement -

முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு.கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை எம்.ஜி.எம் (MGM) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகத் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மருத்துவமனையில் அனுமதி:
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையைக் கண்டறிய, அரசு தரப்பில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

முதலமைச்சர் நலம் விசாரிப்பு:
எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்ட முதலமைச்சர் விஜய், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்து, விரைந்து குணமடையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அவர்களுக்குத் தேவையான அனைத்து தீவிர சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது பரிபூரண நலமுடன் உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ‘I am Sorry’ எனச் சொல்ல வேண்டும்: முதல்வர் விஜய்க்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

MUST READ