spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

 மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்க வங்கிகள் திவாலானதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்பட்டது.

அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது. இந்த அளவு தற்போது 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. விலை சரிவை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைத்ததால் தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.45,160- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ. 5,645-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ