
ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயமடைந்தார்.

“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரி (Jalpaiguri) மாவட்டத்தின் கிரந்தி (Kranti) பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, அங்கிருந்து பாக்டோக்ரா பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்தார்.
பைகுந்தப்பூர் (Baikunthapur) என்ற வனப்பகுதியில் ஹெலிகாப்டர் சென்றுக் கொண்டிருந்த போது, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, செவோக் ராணுவப் படைத் தளத்தில் (Sevoke Military Station) ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கை மற்றும் கால்களில் காயம் ஏற்படவே, கொல்கத்தாவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு சென்றார்.
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
இதனிடையே, முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.