spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...... ஆதிபுருஷ் வசனகர்த்தா!

மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…… ஆதிபுருஷ் வசனகர்த்தா!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனம் மற்றும் டெட்ரோஃபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ராமாயண காவியத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபாஸ் ராமனாகவும் கீர்த்தி சலூன் சீதையாகவும் சைப் அலிக்கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

திரைக்கு வரும் முன்பு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால் திரைக்கு வந்த பிறகு பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் ஒரு சில நாட்களில் 500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

we-r-hiring

அதன் பிறகு படிப்படியாக வசூலில் சரியத் தொடங்கிய இந்த படத்திற்கு பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது.அதாவது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தினரையும் அவர்களின் நம்பிக்கையையும் அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டது.

தொடர்ந்து எதிர்ப்புகளை சம்பாதித்த ஆதிபுரூஷ் திரைப்படத்தின் வசனகர்த்தா மக்களின் உணர்வுகளை புண்படுத்திய வசனங்களுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

வசனகர்த்தா மனோஜ் முந்தசிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறேன். எனது இரு கைகளையும் எழுப்பி நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். நம் கடவுள் அனுமன் நம்மை ஒற்றுமையாக வைத்திருப்பார். நம்முடைய புனித சனாதனத்திற்கும், நமது மகத்தான தேசத்திற்கும் சேவை செய்ய அருள் புரிவார்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ