spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கேள்வி & பதில்இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?

-

- Advertisement -

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?

என். கே. மூர்த்தி பதில்கள்

ஆனந்த் – ஆவடி
கேள்வி – கனவு வாழ்க்கையைப் பற்றி உங்கள் கருத்து?

பதில் : அது முடியாது, அது சாத்தியமில்லை என்ற நோய் நம்மில் பலரிடம் இருப்பதை பார்த்திருக்கிறோம். முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணம் செய்த மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. “உலகில் உன்னை வரவேற்கும் மனிதர்களும் இருக்கிறார்கள், அறவே வெறுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்”. உங்களை வரவேற்கும் உலகத்திற்காக கனவு காணுங்கள்.

we-r-hiring

மாற்றம் முன்னேற்றம்

கனவு காணுங்கள். அதனை செயல்வடிவமாக மாற்றுங்கள். இந்த உலகம் கனவு கண்டவர்களால் படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

கனேஷ் – திருநின்றவூர்
கேள்வி – தனி மனிதனால் சமுதாயத்தை மாற்ற முடியுமா?

பதில் : முடியும்! சமுதாயம் என்பது நீங்களும் நானும் தான். உங்களுடைய கோபம், பொறாமை, பிரச்சனைகள், சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கும், உங்களை சுற்றிலும் உள்ள குழப்பத்திற்கும், துயரத்திற்கும் காரணம் என்ன? அந்த துயரமும், குழப்பமும் தானாகவே தோன்றிவிட வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் நானும் தான் அதை உற்பத்தி செய்தோம்.

உங்கள் ஆழ் மனதில் என்ன இருக்கிறதோ, அது வெளி உலகில் வெளிப்படுகிறது. நீங்களும் நானும் என்னவாக இருக்கிறோம், என்ன நினைக்கிறோம், என்ன உணர்கிறோம், அன்றாட வாழ்வில் என்ன செய்கிறோம் என்பதுதான் சமுதாயமாக மாறுகிறது. அதுதான் உலகின் கட்டமைப்பு.

தனி மனிதனால் சமுதாயத்தை மாற்ற முடியுமா? நாம் வாழும் வாழ்க்கை முறையில் தான் குழப்பத்தை தோற்றுவிக்கிறோம் அல்லது ஒழுக்கத்தை தோற்றுவிக்கிறோம். நாம் தான் இந்த சமுதாயத்தை உற்பத்தி செய்கிறோம்.

நம்முடைய அன்றாட வாழ்வில் தோன்றும் எண்ணங்களில், உணர்வுகளில், செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அந்த எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் நம்மை சுற்றிலும் பரவி மாற்றம் நிகழ்வதை பார்க்க முடியும்.

ஆறுமுகம் – திருநின்றவூர்
கேள்வி – சா.மு.நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறாரா?

பதில் : நாசர் மீண்டும் அமைச்சராகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு முன்பு தொகுதியில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அம்மா மண்டபம், பட்டாபிராம் ஐடி பார்க் போன்ற முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

 

S.M.Nasar

ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்கிறார் என்பதை தலைமை கூர்ந்து கவனித்து வருகிறது. உளவுத்துறை வாயிலாக தகவல்களை உடனுக்குடன் கேட்டு வருகிறது. அதனால் முக்கிய பிரச்சனைகளில் அக்கறை காட்ட வேணடும்.

செல்வம் – ஆவடி
கேள்வி – பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வெற்றி பெறுமா?

பதில் : நிச்சயமாக வெற்றி பெறும். அண்ணாமலை, அவருடன் பாதயாத்திரை செல்பவர்களுக்கு சுகர், பிபி போன்ற நோய் இருப்பதாக அறிந்தேன்.

https://www.dailythanthi.com/News/State/bjp-leader-annamalai-announced-padayatra-in-tamilnadu-860207

அதற்கு தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இந்த பாதயாத்திரை அவர்களின் நோயிக்கு தீர்வாக அமையும்.

சரண் – அம்பத்தூர்
கேள்வி – என்.எல்.சி.க்கு எதிராக பா.ம.க. செய்த ஆர்ப்பாட்டம் குறித்து உங்கள் கருத்து?

பதில் : என்.எல்.சி.நிறுவனம் மத்திய அரசுடையது. விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்வது மத்திய அரசு.

என்.எல்.சி.க்கு எதிராக பா.ம.க. செய்த ஆர்ப்பாட்டம்

ஆனால் பா.ம.க. மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

சாக்கர்டீஸ் – திருவேற்காடு
கேள்வி – இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது?

பதில் : மணிப்பூர்,மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களை மனதில் வைத்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

DEMOCRACY

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களில் ஜனநாயகம் நன்றாகவே இருக்கிறது.நமது நீதிமன்றமும், சில அமைப்புகளும் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருகிறது.

சவிதா – பாடி
கேள்வி – எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் வைத்துள்ளார்களே?

I-N-D-I-A

பதில் : ஆளும் பாஜக அரசால் “இந்தியா” விற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிகளிடம் இருக்கிறது. அதனால் அப்படி பெயர் வைத்துள்ளதாக கருதுகிறேன்.

ராமர் – மதுரவாயல்
கேள்வி – பத்மசேஷாத்திரயை  கைது செய்திருக்கிறார்களே?

பதில் : பத்மசேஷாத்திரியின் வாய் கொழுப்பே காரணம். நீதிபதியை விமர்சிக்கும் அளவிற்கு துணிச்சல் யார் கொடுத்தது என்று தெரியவில்லை.

ரம்யா – சங்கராபும்
கேள்வி – இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?

பதில் : எதிர்கட்சிகளின் கூட்டணி இப்பொழுதுதான் இரண்டாவது கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் வரை ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.

India Alliance

மேலும் எந்த கூட்டணியிலும் சேராத ஒரிசா முதலமைச்சர் பி.ஜி.பட்னாயக், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட 11 கட்சிகள் இருக்கிறது. இவர்கள் தேர்தலுக்கு பின்னர் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை வைத்துதான் பிரதமரை தீர்மானிக்க முடியும்.

சாதிக் – பட்டாபிராம்
கேள்வி – தேமுதிக கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் : தேமுதிக வின் எதிர்காலம் அக்கட்சியின் தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ கூட தெரியவில்லை.

தேமுதிக கட்சி

நமக்கு தெரிந்தது அய்யோ “பாவம்”

அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்விபதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

MUST READ