spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

-

- Advertisement -

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

death

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (40). இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவரது மகன் விஷ்ணு (10) தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை இருவரும் பம்மதுகுளம் பகுதியில் புழல் ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது சேற்றில் சிக்கி இருவரும் மாயமாகினர்.

we-r-hiring

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மாயமான தந்தை, மகன் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அதிகாலையில் தந்தை, மகன் இருவரது சடலங்களும் கரை ஒதுங்கின. இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

MUST READ