
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார மையங்களை ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 02- ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக வருகிற செப்டம்பர் 13- ஆம் தேதி ஆயுஷ்மான் பவா பிரச்சாரத்தின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் உடல் உறுப்பு தானம், ரத்த தானம் குறித்த பிரச்சாரங்கள் இடம்பெறவுள்ளன.
சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது
ஆயுஷ்மான் பயனாளிகளைக் கொண்ட கிராமம் 100% கொரோனா தடுப்பூசிப் பதிவைக் கொண்டுள்ள கிராமம், ஆயுஷ்மான் கிராமம் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.