spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்ப்பாட்டத்திற்கு இடையில் பாஜக நிர்வாகிக்கு மாரடைப்பு

ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் பாஜக நிர்வாகிக்கு மாரடைப்பு

-

- Advertisement -

ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் பாஜக நிர்வாகிக்கு மாரடைப்பு

அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலைத்துறையை எதிர்த்து பாஜக சார்பாக நேற்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டத்திலும் நடைபெற்றது.

Protest

சனாதனத்தை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

அந்தவகையில், வேலூரில் பாஜக சார்பாக நேற்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென்று பாஜக வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவராஜ்க்கு மார்படைப்பு ஏற்பட்டது. அவரை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகளையும், அவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் பாஜக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவரை அழைத்துச் செல்வதற்கு காவல்துறை வழி விட்டார்கள். அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது நிர்வாகிக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ