
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தொடங்கி வைக்கவுள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 1.57 கோடி பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 1.06 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன காரணம்? என்பது குறித்து தமிழக அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி
அதன்படி, கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வீட்டில் சுமார் 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2.5 லட்சத்துக்கு அதிக வருமானம், அரசு வேலைகளில் உள்ளோரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.