- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டம், சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் அபிநீதி என்ற 4 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

“அனைவராலும் அறியப்பட்ட நடிகரான எனக்கே இந்த நிலை”- நடிகர் பாபி சிம்ஹா வேதனை!
கடந்த இரண்டு நாட்களாக அந்த சிறுமி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.