
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் 235 இந்தியர்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம், இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருவதால், அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருக்கும் மாணவர்கள், பணிக்காக சென்றவர்கள், மருத்துவர்கள் என அங்கிருந்து நாடு திரும்ப விரும்புவோரை அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்னும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
அதன்படி, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இருந்து முதற்கட்டமாக, 20 மாநிலங்களைச் சேர்ந்த 212 இந்தியர்கள், அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 21 தமிழர்கள் இருந்தனர். 14 பேர் சென்னை விமான நிலையத்திற்கும், 7 பேர் கோவை விமான நிலையத்திற்கும் தமிழக அயலகத் துறை அதிகாரிகளால், இண்டிகோ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
‘லியோ’ திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!
மேலும், சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் இருந்து இரண்டாவது விமானம் 235 பேருடன் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.