Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய விஜய்

படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய விஜய்

-

- Advertisement -

தளபதி68 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற நடிகர் விஜய், அதனை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளார்.

லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார்.
விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், பூஜை வீடியோ வெளியானது. இந்த காணொலி வாயிலாகவே, படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, முதல் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றனர். இந்நிலையில், அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் விஜய் தாய்லாந்திருந்து புறப்பட்டு சென்னை திரும்பினார்.

MUST READ