spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி!

மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி!

-

- Advertisement -

மரவள்ளிக்கிழங்கில் பாயாசம் செய்து பார்க்கலாம் வாங்க.மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி!

தேவையான பொருள்கள்:

we-r-hiring

மரவள்ளி கிழங்கு – 250 கிராம்
வெல்லம் – 150 கிராம்
பால் – அரை லிட்டர்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் – 3
முந்திரி – 15
உலர் திராட்சை – 10
நெய் – 4 தேக்கரண்டி

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வதற்கு முதலில் மரவள்ளிக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் குக்கரில் வறுத்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சை ஆகிய இரண்டையும் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் ஏலக்காயை இடித்து தூளாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தையும் இடித்து தூள் செய்து, அதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் உருகி வந்த பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, வடிகட்டிய வெல்லம், பால் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பால் நன்கு கொதித்து வந்த பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெய்யுடன் சேர்த்து கலக்கி விட வேண்டும்.மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி!

அதனுடன் தூளாக்கி வைத்துள்ள ஏலக்காயையும் சேர்க்க வேண்டும். அத்துடன் தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும்.

இப்போது இனிப்பான மரவள்ளிக்கிழங்கு பாயாசம் ரெடி.

MUST READ