spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கே.ஜி.எஃப்-3' நிச்சயம் வரும்... அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!

‘கே.ஜி.எஃப்-3’ நிச்சயம் வரும்… அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!

-

- Advertisement -

'கே.ஜி.எஃப்-3' நிச்சயம் வரும்... அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!கே.ஜி.எஃப்-1, கே.ஜி.எஃப்-2 படங்களின் மூலம் இந்திய அளவில் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் யாஷ். இதுவரை எந்த ஒரு கன்னட திரைப்படமும் படைக்காத ஒரு சாதனையை கே.ஜி.எஃப் படங்கள் படைத்திருந்தன. கே. ஜி . எஃப்.சாப்டர் 1 படம் வெளியான போது கர்நாடக மாநிலம் தவிர பெரிய எதிர்பார்ப்பு ஏதுமின்றி வெளியானது. ஆனால் படம் வெளியான பின்பு பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. நிமிடத்திற்கு நிமிடம் மாஸ் காட்சிகளை வைத்து படம் முழுக்கவே புல்லரிக்க வைத்திருந்தனர் படக்குழுவினர். இந்த வெற்றியே படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டது. இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் சிக்ஸர் அடித்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் இறுதியில் ராக்கி பாய் கடலில் மூழ்கி இறந்து விடுவது போல காண்பிக்கப்பட்டது. இதனால் கே ஜி எஃப் கதை முடிந்து விட்டது என நினைத்த நொடியில், படத்தின் இறுதி நிமிடத்தில் ராக்கி பாய் மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என்று அதிரடியாக கே. ஜி. எஃப் 3 படம் வரவுள்ளது எனக் கூறி முடித்திருந்தனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கத்துக்கு எகிறவிட்டது. படத்தின் இயக்குனர் பிரசாந்த் நில் தற்போது பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சலார் திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் 22ஆம் தேதி சலார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.'கே.ஜி.எஃப்-3' நிச்சயம் வரும்... அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்! இந்நிலையில் பிரசாந்த் நீல் கேஜிஎஃப்-3 படம் பற்றிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது” கே ஜி எஃப் 3 படத்தை நான் தான் இயக்குகிறேனா அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை ஆனால் யாஷ் நிச்சயம் அதில் பங்கு வகிப்பார். கே ஜி எஃப் 3 நிச்சயம் வரும், அதற்கான ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயாராகிவிட்டது. நடிகர் யாஷ் மிகவும் பொறுப்பானவர். மேலும் ஒரு படத்தை கமர்சியல் என்னும் காரணத்திற்காக மட்டும் தேர்ந்தெடுக்காமல் பொறுப்போடு நடிப்பவர்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கேஜிஎஃப் 3, படத்தின் வேலைகள் மிக விரைவில் தொடங்கும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

MUST READ