சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், கோயில் கனகசபையில் நான்கு நாட்கள் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயிலின் தீட்சிதர்களைச் சந்தித்து, தமிழக அரசின் அரசாணைப்படி, கனகசபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்; கனகசபையில் பக்தர்கள் ஏற அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் டன்கி திரைப்படம்…. ஷாருக்கானுக்கு கிடைத்த அங்கீகாரம்…
ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் குவிந்து வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.