தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதன்பின் இவர் இயக்கிய சர்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் திருப்தி படுத்தவில்லை. எனவே நிச்சயம் வேற லெவல் கம்பேக் கொடுத்து ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கிறார் என்று ஒரு மாசான அப்டேட்டை கூறியிருந்தார். இது தொடர்பான பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சீதாராமம் பட நடிகை மிர்ணாள் தாகூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை என ரசிகர்கள் பெரிதும் கவலையில் இருந்தனர். தற்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 ஜனவரி 27 ஆம் நாளில் தொடங்கப்பட இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது SK21 படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.