நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் முதல் ஆறு சீசன்களையும் வெற்றிகரமாக கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி 90 நாட்களை எட்டி உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பதை சக போட்டியாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் டபுள் எவிக்சன் நடந்தது. அதன்படி ரவீனா மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். மேலும் விசித்ரா, மாயா, அர்ச்சனா உள்ளிட்ட எட்டு பேர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா ,விசித்ரா, மாயா ஆகிய மூவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் கண்டிப்பாக பிக் பாஸ் சீசன்7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளனர். என்ன காரணம் என விசித்ரா கேட்க காரணம் தெரியவில்லை என பூர்ணிமா கூறுகிறார்.
அர்ச்சனாவிற்கும் வெளியில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் யார் டைட்டில் வின்னர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.