spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மார்கழி மாதத்தில் பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகள்!

மார்கழி மாதத்தில் பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகள்!

-

- Advertisement -

மார்கழி மாதத்தில் பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகள்!மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் உடலில் வறட்சி ஏற்படுகிறது. அதனால் முகம், கை, கால்கள், உதடு போன்றவைகளில் வெடிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த இடங்கள் கருமையாகவும் தோற்றமளிக்கின்றன.

இவைகளை தடுக்க தற்போது சில எளிமையான அழகு குறிப்புகளை பார்க்கலாம்.

we-r-hiring

தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் உடல் வறட்சியை தடுக்கலாம். குளிக்கும் சமயங்களில் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பால் அல்லது தயிர் போன்றவற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் வறண்ட சருமம் பொலிவாகும்.

நான்கு முதல் ஐந்து பாதாம், சிறிதளவு தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாமை பவுடராக்கி தேனில் குழப்பி முகத்தில் தேய்த்து 10லிருந்து 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து முகத்தை கழுவி வர முகம் மென்மையாகவும் வறட்சிஇன்றியும் காணப்படும்.

தூளாக்கிய ஓட்ஸ் மற்றும் பப்பாளி பழத்தை ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேற்றப்பட்டு முகம் அழகாக மாறும். இயல்பிலேயே எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

சிறிதளவு தேனில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து அதனை உதகைகளில் தேய்த்து மசாஜ் செய்து வர உதட்டில் உள்ள வெடிப்புகள் மறையும்.மார்கழி மாதத்தில் பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகள்!

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ