spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிப்பு!

-

- Advertisement -
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் தொடர்பாக மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது.

we-r-hiring

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 15ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

MUST READ