நம் சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளி என்பது ஒரு நோய் கிடையாது. அதேசமயம் இவை மற்றவர்களுக்கு பரவுவதும் கிடையாது. சருமத்தில் தோன்றும் நிற மாற்றம் தான் இதற்கு காரணம்.
தற்போது வெண்புள்ளியை குணப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நுணா இலை மூலிகை எண்ணெயில் ஊறவைத்து பின் அதனை வெண்புள்ளி இருக்கும் இடங்களில் தேய்த்து வந்தால் வெண்புள்ளியானது விரைவில் குணமடையும்.
அதுமட்டுமில்லாமல் இந்த நுணா இலையானது பல் வலி, தொண்டை வலி, சொறி சிரங்கு ஆகியவற்றை சரி செய்யவும் உதவுகிறது. மேலும் இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
தொண்டை வலி ஏற்படும் சமயத்தில் இந்த நுணா இலையை எடுத்து அதன் சாறு பிழிந்து தொண்டையில் பற்று போட்டு வர தொண்டை வலி தீரும். அதேசமயம் இடுப்பு வலி, மூட்டு வலிக்கும் இதுபோன்று பற்று போட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சொறி சிரங்கு இருப்பவர்கள் நுணா இலையை அரைத்து உடம்பில் தேய்த்து வந்தால் விரைவில் குணமடையும்.
நுணா இலையையும், சிறிதளவு உப்பையும் எடுத்து, அதனை வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். கொரகொரப்பான நிலையில் இருக்கும் இந்த மருந்தை அடை போல் தட்டி நிழலில் உலர்த்தி மீண்டும் பொடியாக்கி கொள்ள வேண்டும். பின் இந்த பொடியை பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுவாகி, பல் வலி, இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகள் குணமடையும்.
எனினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.