நம் உணவு பழக்கங்களின் மாற்றத்தினால் இன்று வாழும் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாகற்காய் ஜூஸ், வேப்பஞ்சாரு ஆகியவற்றை குடித்து வருவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். அந்த வகையில் வேப்பம்பூவில் பச்சடி செய்து சாப்பிட ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
தற்போது வேப்பம்பூ பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வேப்பம்பூ பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ – ஒரு கப்
மிளகாய் வற்றல் – இரண்டு
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – தாளிப்பதற்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
வெல்லம் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வேப்பம்பூ பச்சடி செய்ய முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள புளியின் அளவை எடுத்து அதனை கரைத்து சேர்க்க வேண்டும்.
புளி கரைசல் நன்கு கொதித்த பின் அதில் உப்பு , வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதன் பின் வேப்பம்பூவை தனியாக வறுத்து புளிக் கரைசலுடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது வேப்பம்பூ பச்சடி தயார்.
வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சமயங்களில் வேப்பம் பூவினை சேகரித்து வைத்து பச்சடியாகவோ துவையலாகவோ செய்து சாப்பிடலாம்.