தருமபுரி அருகே கூலி வேலைக்காகச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த வயதான பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை!
போலையம்பள்ளி கிராமத்தில் இருந்து பட்டியலினத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரன் என்பவரது விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.
அப்போது வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர் தொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிர்ச்சியடைந்து வீடியோ எடுத்துள்ளார்.
நெல்லை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, கொட்டாங்குச்சியில் தேநீர் அளித்த தரணி மற்றும் அவரது மாமியார் சின்னத்தாயி ஆகிய இருவரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.