
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
“அரசமைப்புக்கு எதிரானது”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தொகுதி மறுசீரமைப்பை கைவிட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை என்பது தென் மாநிலங்கள் மீது தொங்கும் கத்தியாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
விகிதாச்சாரத்தில் படி பார்த்தால் தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை குறைந்துவிடும். கடந்த 1971- ஆம் ஆண்டில் பீகாரும், தமிழ்நாடும் ஒரே மக்கள் தொகையை கொண்டிருந்தன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான பரிசாக தொகுதி எண்ணிக்கை குறைப்பு அமைந்துவிடும். அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்த முற்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு!
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பேசி வருகின்றனர். முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானங்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.