மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை ஆழமாக எடுத்துக் கூறி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
அடுத்ததாக ரஜினியை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதேசமயம் துருவ் விக்ரமின் 3வது படமான இந்த படம் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பிரபல கபடி விளையாட்டு வீரர் மனத்தி பி கணேஷ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான நிலையிலும் படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி 2024 மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் ஏற்கனவே ஆதித்ய வர்மா, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் துருவ் விக்ரம், டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


