- Advertisement -
லால் சலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக சித்தார்த்தை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநரும் ஆவார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியங்கா மோகன், விவேக், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர்.
