spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை?"- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

“சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை?”- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

 

we-r-hiring

சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!

நோயுற்ற தனது தாயாரைக் கவனிக்க தன்னை இலங்கைக்கு அனுப்பப் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (பிப்.29) காலை 11.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, “சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை; சாந்தனை இலங்கைக்கு அனுப்ப பிப்ரவரி 22-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை?” தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜன.24- ஆம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டியிருந்தார்; சாந்தனால் நகரக்கூட முடியவில்லை” என்று வாதிட்டார்.

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

இதையடுத்து, இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதனிடையே, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சாந்தன் நேற்று (பிப்.28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ