- Advertisement -
ஈரோடு இடைத்தேர்தல் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, “கை” சின்னத்தை ஆதரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரன், வீதிவீதியாக ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒட்டகத்தில் திருத்தணி எம்.எல்.ஏ பரப்புரை செய்த விவகாரத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பகுதி செயலாளர் குமரவடிவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமீறல், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
