spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாராவை புகழ்ந்த அறம் பட இயக்குனர்!

நயன்தாராவை புகழ்ந்த அறம் பட இயக்குனர்!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடிக்கிறார். நயன்தாராவை புகழ்ந்த அறம் பட இயக்குனர்!அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அறம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியிருந்தார். இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுக்கும் போராட்டத்தை மிகவும் எமோஷனலாக காட்டியிருந்தார் இயக்குனர். அதில் மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. இயக்குனர் கோபி நயினார் அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் மனுஷி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் கோபி நயினார் நயன்தாராவை புகழ்ந்து பேசி உள்ளார். நயன்தாராவை புகழ்ந்த அறம் பட இயக்குனர்!அதாவது, “அறம் பட கதையை வெறும் ஐந்து நிமிடம்தான் நயன்தாராவிடம் சொன்னேன். அவர் உடனே அறம் படத்திற்கு ஓகே சொல்லி அவரது பார்சல் வைத்திருந்த 3500 ரூபாயை என் கையில் கொடுத்து, தப்பா நினைச்சுக்காதீங்க சார் என் பர்சில் இப்போது இவ்வளவு தான் இருக்கிறது. இதை அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன நயன்தாரா மீதி கதையை கேட்க கூட இல்லை” என்று பாராட்டியுள்ளார்.

மேலும் கோபி நயினார், “நல்ல படங்களை இயக்குபவர்களுக்கு ஹீரோக்கள் யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை. நடிகைகள் தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.

we-r-hiring

 

MUST READ