HomeGeneralஅம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து...

அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

-

சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கௌசல்யா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டு வருகிறார்.

எப்பொழுதும்போல் யுவராஜ் மனைவியிடம் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

கௌசல்யாவோ வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

இவர்களுடைய ஒன்றறை வயது பெண் குழந்தை மீனாட்சி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று கௌசல்யா வீட்டு வேலையில் பிஸியாகிப் போனார்.

அப்பொழுது வீட்டிற்குள் வைத்திருந்த மீன் தொட்டியில் மீனாட்சியின் விளையாட்டு பொருள் விழுந்துள்ளது.

குழந்தை மீனாட்சி
மீன் தொட்டிக்குள் விழுந்த பொருளை எடுக்க முயன்றபோது தலை கீழே கவிழ்ந்து உள்ளே விழுந்து விட்டாள்.

இதனை கவனிக்கத் தவறிய தாய் கௌசல்யா வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்தார். பத்து நிமிடம் கழித்து கௌசல்யா உள்ளே வந்து பார்க்கும் பொழுது குழந்தை தலைகீழாக மீன் தொட்டியில் விழுந்திருப்பதைக் கண்டு அயோ… என்று கதறி… குழந்தையை தூக்கி மார்பில் போட்டுக் கொண்டு
அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த மருத்துவமனை மருத்துவரோ குழந்தையின் நிலையை அறிந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

பதறி அடித்துக் கொண்டு எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த எழும்பூர் அரசு மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்..

தொடர்ந்து மருத்துவமனை தகவலை அடுத்து அம்பத்தூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

MUST READ