Homeசெய்திகள்அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

-

- Advertisement -

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே  வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில புதிய பொதுக்குழு கூட்டம் சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. தலைவர் பேராசிரியர்  கே எம்  காதர் மொகிதின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

தமிழக அரசிற்கு துணை நிற்போம்

தமிழ்நாட்டில் திராவிட மாடல் தி.மு. கழக நல்லாட்சியில், மக்களின் உயர்விற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைப் பாராட்டுகிறோம்.

குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றத்திற்குப் பல்வேறு திட்டங்களை அளித்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடர்ந்திட பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்தியா கூட்டணி வெல்லட்டும், இந்தியத் திருநாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயக நெறிமுகைள், சமூக நீதிக் கொள்கைகளுக்கு முரணாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதற்கு இக்கூட்டம் வேதனையைத் தெரிவிப்பதாகவும், பாசிச பாஜகவிற்கு மாற்றாக இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற களப்பணிகளாற்றிடவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.40 தொகுதிகளிலும் எங்கள் தொகுதியாக கருதி நாங்கள்  போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம் லீக் இதுவரை  வேலூர், தேனி, பெரியகுளம், ராமநாதபுரம், மத்திய சென்னை, மயிலாடுதுறை  என ஐந்து தொகுதிகளில் எப்பொழுதும் போட்டியிடுவோம் என்றும் இதுவரை போட்டியிட்ட  ஐந்து தொகுதிகளில்  இரண்டு தொகுதியில்  போட்டியிட கேட்டக போதாக தெரிவித்தார்

ராமநாதபுர தொகுதியில் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றோம். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் தொகுதி நிச்சயமாக எங்களுக்கு தருவார்கள். அகவே, முதல் தொகுதி ராமநாதபுரம் அடுத்து திருச்சி  தொகுதியை கேட்டு பெறுவோம் என்று தெரிவித்தார்

இஸ்லாமிய சமுதாய ஓட்டு பாஜகவிற்கு இல்லாமல் போவத்திற்கு காரணம் இஸ்லாமியர் மார்க்கத்தை சேர்ந்தவர்கள் யாரையுமே இந்த நாட்டு குடிமக்களாக பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.  அவர்கள் எந்த ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தியதில்லை. சட்டமன்றத் தொகுதியிலும் முஸ்லிம் வேட்பாளராக நிறுத்துவதில்லை.

முஸ்லிம்களை வைத்து நாங்கள் ஓட்டு கேட்க மாட்டோம்.  முஸ்லிம்கள் ஓட்டு  எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லக்கூடிய கட்சி பாஜக.

25 கோடி  இஸ்லாமிய சமுதாயத்தில்  யாரும்  ஒருபோதும் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணியை விட்டு தனியா வருவது எல்லாமே நாடகம், எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தையும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் கிடையாது என்று தெரிவித்தார்

MUST READ