Homeசெய்திகள்கட்டுரைமேடையில் புலம்பித் தவித்த அமித்ஷா! தினம் ஒரு ட்விட் - பற்றி எரியும் வடக்கு! 

மேடையில் புலம்பித் தவித்த அமித்ஷா! தினம் ஒரு ட்விட் – பற்றி எரியும் வடக்கு! 

-

- Advertisement -

திமுக, காங்கிரஸ் என அரசியல் கட்சிகளுக்கு எதிரான தனிப்பட்ட உணர்வுகளை மனதில் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பாஜகவின் ஆபத்தை மக்களிடம் இருந்து மறைக்க முயற்சிப்பவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாடடிள்ளார்.

தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் தமிழக அரசு மற்றும் திமுக குறித்து தெரிவித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எந்த மொழி மீதும் பகை இல்லை. இந்தி திணிப்பை ஏற்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பவும் சொல்லியுள்ளார். 1938ல் இருந்து இதை தான் தமிழ்நாட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமல் இந்தியை வெறுக்கிறீர்கள், ஆனால் இந்தி வந்துவிட்டது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்கிறார்கள். இங்கு பணிபுரிந்து விட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் முதலமைச்சரின் கருத்தை ஆமோதிக்கின்றனர். ஸ்டாலின் சொல்வது சரி என்று சொல்லி, அவரது டிவிட்டை ரீட்வீட் செய்கின்றனர்.

'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
Photo: Minister Amit Shah

தமிழ்நாட்டில் 2026ல் திமுக ஆட்சி அகற்றப்பட்டு பாஜக ஆட்சி பதவி ஏற்கும் என்று டெல்லியில் இருந்து வந்தவர்கள் சொல்கிறார்கள். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவரை மாவோயிஸ்ட் என்று சொல்கிறார். என்ன அர்த்தத்தில் பெரிய பெரிய வார்த்தைகளை சர்வ சாதாரணமாக ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பயன்படுத்துகிற சொற்களை தமிழ் சமூகம் எப்படி புரிந்து கொள்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசை தேச விரோத அரசு என்று சொன்னால் தமிழ் சமூகம் எப்படி பார்க்கிறது என்பது முக்கிய கேள்வியாக எழுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்படி சொல்கிறார். பாஜக சார்பில் விவாதங்களில் பங்கேற்பவர்கள் பிரிவினைவாத திமுக என்கிறார்கள்.  மக்களை சாதி ரீதியாக பிரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பிரிவினை குறித்த அவர்களது புரிதல் அந்த அளவிற்குதான் உள்ளது. பிரிவினையை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்கு சொல்லித்தராதீர்கள் என்கிறார்கள். மத்திய அரசு சொல்வதை ஏற்க மறுப்பதையே அவர்கள் தேச விரோதம் என்று சொல்கிறார்களா?

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

மும்மொழி கொள்கை என்பது அவர்களது பார்வை, கொள்கை. பாஜகவின் கோட்பாடுகளின்படி மும்மொழி கொள்கையை உருவாக்கியுள்ளனர். அதை ஒரு மாநிலம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் மாநிலத்திற்கு ஏற்ற கொள்கையை அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள். புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8ஆம் வகுப்புகளில் வடிகட்டல் முறை வைத்திருக்கிறார்கள். அதில் இருந்து தப்பி வருகிறவர்களை ஒரு வேலை வேண்டும் என்பதற்காக விஸ்வ கர்மா திட்டம் வைத்துள்ளார்கள். இந்த திட்டங்கள் எல்லாம் ஒருங்கிணைந்த திட்டமாக தேசிய கல்விக்கொள்கை என்ற  பெயரில் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் தேசிய கல்விக்கொள்கையின் உண்மையான நோக்கத்தை புரிந்துகொள்கிற மனநிலையில் பல மாநிலங்களின் மக்கள் இல்லை என்பதுதான் சிக்கலாக உள்ளது. இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததற்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதரவு குரல்கள் வருவதை பார்க்க முடிகிறது. கேரளா கடந்த ஆண்டு வரை பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இருந்துள்ளது. ஆனால் அம்மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தராததால் கேரளா அந்த திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளது.

கேரளாவில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணி

தமிழ்நாடு அரசை தேச விரோத அரசு என்று சொன்னதன் மூலம் தேசிய அளவில் வடஇந்தியாவில் பாஜக அணி திரட்ட முடியுமா? என்றால், இந்திக்கு எதிராக பேசுகிறார் என்று அணி திரட்ட முயற்சிக்கலாம். ஆனால் இந்திக்கு எதிராக பேசவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் எந்த மொழியோடும் எங்களுக்கு பகையும் இல்லை. இந்தியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்று விளக்கியுள்ளார். அதனுடைய உண்மையான பொருளில் மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். அப்படி சேரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் நிலையை புரிந்து கொள்வார்கள். புதிய கல்விக் கொள்கையில் இந்தித்திணிப்பு என்பது ஒரு பகுதிதான். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் இதேபோல் 3, 5வது வகுப்புகளில் மாணவர்களை வடிகட்டி வெளியே அனுப்பினார்கள் என்றால், அதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் யார்? என்பதை மாநிலத்திற்குள் காங்கிரஸ் கட்சி முதன்மையான பிரச்சாரமாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான ஆபரேஷன் தமிழ்நாடு என்ற திட்டத்தை பாஜக முயற்சி செய்யத்தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அவர்களுக்கு வெற்றியைத் தருமா? தராதா? என்பதை தமிழ்நாட்டு மக்கள் தீர்மானித்துதான் ஆக வேண்டும். அதில் மிகவும் தெளிவாக உள்ளனர். திமுக, காங்கிரஸ் என அரசியல் கட்சிகளுக்கு எதிரான தனிப்பட்ட உணர்வுகளை மனதில் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் தான் பாஜக இல்லவே இல்லையே? இங்கு வந்து பாஜகவின் ஆபத்து பற்றி ஏன் பேச வேண்டும்? என சொல்கிறார்கள். இதன் மூலம் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து நடக்கக்கூடி நிகழ்ச்சிகளையும், அதன் மூலமாக இருக்கக் கூடிய ஆபத்தான நிலைமைகளையும் எளிதாக புறந்தள்ளவும், கடந்து போவதுமாக அதை மக்களிடத்தில் கொண்டு செல்கிறவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். விஜய் புதிதாக மும்மொழி கொள்கை என்கிறார். அது இவ்வளவு நாளாக தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிற பிரச்சினை ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ