Homeசெய்திகள்கட்டுரைஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!

ஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!

-

- Advertisement -

துணை வேந்தர்கள் மாநாட்டை ஒரு அரசியல் மாநாடாக தான் ஆளுநர் நடத்தியதாகவும், அதனை துணை வேந்தர்கள் புறக்கணித்தது தவறு இல்லை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- துணை வேந்தர்கள் அனைவரும் ஆளுநர் மாநாட்டை புறக்கணித்துள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். நாடே துக்கத்திலும், போர் பதற்றத்திலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டை ஒத்திவைக்காமல் ஆளுநரும், குடியரசுத் துணைத் தலைவரும் நடத்துவது எவ்வளவு மோசமான செயலாகும். பிரதமர் சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்துவிட்டு வந்து, அவர் தேர்தல் வேலைகளை பார்க்க போய்விட்டார். இங்கே குடியரசுத் துணைத் தலைவரும், ஆளுநரும் மாநாட்டை அவ்வளவு முக்கியமாக நினைத்துக்கொண்டு செய்வதுதான் இவர்களது தேசபக்தியாகும். நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், குடியரசுத் தலைவரை சந்தித்து பேசியுள்ளார்கள். இந்த சூழலில் குடியரசுத் துணை தலைவர் டெல்லியில் இருக்க வேண்டாமா?

அவர் உச்ச நீதிமன்றத்துடன் சண்டை போடுகிறார். தமிழ்நாட்டில் கல்விச்சூழலை கெடுக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே வருகிறார். ஆனால் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, பொதுமக்கள் கொல்லப்பட்டது இதற்கெல்லாம் அவர் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அப்போது, பாஜக இதுவரை பேசிய தேச பக்தி என்பது, தேச பாதுகாப்பு எல்லாம் பொய் என்பது இந்த ஒரே சம்பவத்தில் உறுதியாகிவிட்டது. டெல்லியில், காஷ்மீரில் என்ன சூழ்நிலை நிலவுகிறது. எல்லையில் எப்போது போர் வெடிக்கும் என்கிற சூழ்நிலையில், ஜெகதீப் தன்கர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அப்படி என்ன முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு இது? மாநாட்டை ஒத்திவைக்காததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

துணை வேந்தர்கள் மாநாட்டை, ஒரு அரசியல் மாநாடகத்தான் நடத்துகிறார்கள். அந்த அரசியல் மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளார்கள். இது வரலாற்று சிறப்பு மிக்க செய்தியாகத்தான் பார்க்கிறேன். தமிழ்நாடு மக்கள், தமிழ்நாட்டின் கருத்துக்களை பிரதிபலிக்கக்கூடியவர்கள், அவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை இன்றைக்கு துணை வேந்தர்கள், ஆளுநரின் மாநாட்டை புறக்கணித்துள்ளது காட்டுகிறது. மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டை சுலபமாக எதிர்கொள்ள முடியாது என்பதை வரலாறு நெடுக நாம் உணர்த்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிர்களான துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளதற்கு நாம் பெருமை கொள்ளலாம். அதேவேளையில் தமிழ்நாடு அரசும், உயர்கல்வித்துறையும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் அடித்தது போல செய்திருக்கிறார்கள். ஆளுநர் ரவி செய்து வந்த அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு, சரியான பதிலை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

துணை வேந்தர்களும், பதிவாளர்களும் ஒட்டு மொத்தமாக ஆளுநரின் மாநாட்டை புறக்கணித்துள்ளது என்பது அவர்கள் கற்ற கல்வியின் பயன், இன்றுதான் பயன்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. கற்ற கல்வியின் பயன் என்பது அநீதிகளை எதிர்ப்பது. நாட்டின் அரசியல் சட்டத்தை பாதுகாப்பது. சட்ட விரோத செயல்பாடுகளுக்கு துணை போகாமல் இருப்பது ஆகும். எனவே துணை வேந்தர்களுக்கும், பதிவாளர்களுக்கும் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசியல்  சட்டத்திற்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அதை நீங்கள் ஆதரிக்கக் கூடாது. ஏனென்றால் இங்கே பாஜகவின் ஆட்சியோ, திமுகவின் ஆட்சியோ நடைபெறவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அப்போது நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தைதான் பார்க்க வேண்டும்.

அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள் நாங்கள் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி வெளியில் பேசுவோம் என்பது உச்சநீதிமன்றத்திற்கு சவால் விடுவதாகும். உச்சநீதிமன்றத்தை நேரடியாக அவமதித்த குடியரசுத் துணைத் தலைவரை கூப்பிட்டு வந்து மாநாட்டை நடத்துவதன் மூலமாக நீதித்துறைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும்,  உயர்கல்வித்துறைக்கும் சவால்விட்ட ஆளுநருக்கு இன்றைக்கு தமிழ்நாடு துணை வேந்தர்கள் நல்ல ஒரு மரியாதையை காட்டி இருக்கிறார்கள். தமிழ்நாடு என்றால் என்ன என்று ஜெகதீப் தன்கர் இன்றைக்கு புரிந்து கொண்டிருப்பார்கள். துணை வேந்தர்கள் மாநாட்டில், தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றால் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சட்டத்தின் கீழ் அவர்கள் மாநாட்டிற்கு சென்றார்கள்? அவர்களுக்கு வேந்தர் ஆளுநரா? ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாநாட்டை புறக்கணிக்கும்போது இவர்கள் எந்த அடிப்படையில் மாநாட்டிற்கு சென்றார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

ஆளுநர் மாநாட்டில் பங்கேற்காத துணை வேந்தர்கள் மீது ஆளுநரால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. எந்த சட்டத்தின் கீழும் ஆளுநர் ரவி, துணைவேந்தர்கள்  மீதோ, அல்லது பதிவாளர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. துணை வேந்தர்கள் நியமிக்கவோ, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. இன்றைக்கு போர்ச்சூழலில் இவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலை, உயர் கல்வியில் குழப்பம் உண்டாக்க வேண்டும் என்கிற அரசியலை புறக்கணித்துள்ளது தமிழ்நாடு என்றுதான் பார்க்க வேண்டும்.

கல்வியை சூத்திர, பஞ்சமர்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு  கொடுக்கக்கூடாது என்பதில் பார்ப்பனியம் மிகவும் தெளிவாக உள்ளது. அதனால்தான் போரோ நடந்து கொண்டிருந்தாலும் கல்வியை கொடுக்கக்கூடாது என்று ஒரு உள்நாட்டுப் போரை நிகழ்த்துவதற்காக அவர்கள் வருகிறார்கள். அவர்களை எதிர்த்து போராடுவது என்பது ஜனநாயக ரீதியான உரிமையாகும். அந்த வகையில் கோவையில் உள்ள அமைப்புகள் எல்லாம் ஆளுநர், குடியரசுத் துணை தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் அதேபோல் துணை வேந்தர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்காதது என்பது எந்த தவறும் கிடையாது. ஒரு நல்ல ஆளுநர் கோரிக்கை வைத்தால், நாம் மறுபரிசீலனை செய்து இந்த சூழல் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் மக்களுக்கு எதிரான அனைத்து வேலைகளையும் பார்த்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும், காஷ்மீரில் உயிர்த்தியாகம் செய்த மக்களையும் அவமதித்துவிட்டு அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு வருகிற போது, தமிழ்நாடு அவரை புறக்கணிப்பதில் எந்த தவறும் கிடையாது. மக்களுக்காக நேர்மையாக அரசியல் சட்டப்படி நின்றால் மக்கள் ஆதரவாக நிற்பார்கள். மக்கள் விரோதமாக செயல்பட்டால், எல்லாவற்றிலும் அரசியல் செய்தால் மக்கள் உங்களை புறக்கணிப்பாளர்கள். அதுதான் தற்போது நடைபெற்றுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ