Homeசெய்திகள்ஆவடிபேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

-

ஆவடி பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான  குளிரூட்டப்பட்ட ஓய்வறையை சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழக ஆவடி கிளை பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நடைபெற்றது. இதனை ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு குளிரூட்டப்பட்ட அறையை ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

இதனை தொடர்ந்து ஆவடி அடுத்த கோவில் பதாகை ட்ரினிட்டி அவென்யுவில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிறுத்ததிற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கொடியசைத்து பேருந்தை நிறுத்தத்தில் இருந்து துவக்கி வைத்து பின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிறுத்த வசதியை அமலுக்கு கொண்டு வந்த சா.மு. நாசருக்கு பொது மக்கள் நன்றி கூறினர்.

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

இதில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், பகுதி செயலாளர்கள் நாராயண பிரசாத், பொன் விஜயன், மாநகர செயலாளர் சன் பிரகாஷ் உள்ளிட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

MUST READ